வடமாகாண அபிவிருத்தி – அரசியல் தலைவாகள் தீர்மானிக்க வேண்டும் – ரெஜினோல்ட்

313 0

CV and Reginold gure_CIவடமாகாண அபிவித்தி தொடர்பில் வட மாகாண அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாண செயலகத்தில் முதலீட்டாளர்களுக்கான மாநாடு ஒன்று விரைவில் நடத்தப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களே வடமாகாணத்தில் முதலீடு செய்வதற்கு உள்ளீர்த்துக்கொள்வதே இதன் நோக்கமாகும் என அவர் குறிபிட்டார்.

வடமாகாணத்தில் முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் என்ற வகையில் தம்மால் தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது என தெரிவித்த அவர், அது தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளே தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.