தாதியர் சங்க வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

232 0

அரச தாதியர் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாடல்களில் தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில்கள் கிடைத்தமையால் குறித்த வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக கைவிட்டதாக அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
இதேவேளை எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ள உறுதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதிகரிக்கப்பட்டிரும் சம்பளத்தைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அதிகாரிகள் உடன்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment