வாகனவிபத்தில் இருவர் உயிரிழப்பு

270 0

கேகாலை – அவிஸ்ஸாவெல்ல பாதையின் பிந்தெனிய பிடகல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை கார் ஒன்று பாதையை விட்டு விலகி குறுகுடஓயா ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளமையாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காரிக்குள் இருந்த 3 பெண்கள் அடங்கலாக 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனத்தின் ஓட்டுநரும் அவரது மகனுமே விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிந்தெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment