சமூர்த்தி சீர்திருத்த சுற்றரிக்கை இரத்தானது

211 0

சமூர்த்தி சீர்திருத்த சுற்றரிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். 

இதேவேளை சமூர்த்தி உதவிகள் ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.

கடந்த 11ம் திகதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார். தற்போதைய அரசாங்கம் தீர்மானங்களை எடுப்பது மக்களின் பொருளாதார நிலமையை சிந்தித்தே என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இதேவேளை அரசாங்கம் மக்களின் நிவாரணங்களை குறைத்து முன்னெடுத்துச் செல்லும் இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக அடுத்த வாரமளவில் நாடு பூராகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை சமூர்த்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜகத் குமார கூறினார்.

Leave a comment