ராஜபக்‌ஷ என்ற பெயரில் நாடு பூராகவும் காணிகள்

223 0

யோஷித, நாமல் மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் பெயரில் நாடு பூராகவும் 21 காணிகள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார். 

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர்களினால் காணிகள் வாங்கப்பட்ட உறுதிப்பத்திரங்களின் இலக்கங்கள், வாங்கப்பட்ட திகதி மற்றும் வாங்கிய விலைகள் என்பன தொடர்பில் தன்னிடம் சரியான தகவல்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற பாரியளவு காணிகளை வாங்குவதற்கு நிதி கிடைத்தது எவ்வாறு? என்று கேள்வி எழுப்பியுள்ள அநுரகுமார திசாநாயக்க, பொதுமக்களின் நிதியை இவ்வாறு மோசடி செய்யும் நபர்கள் நாட்டுக்காக எவ்வாறு பணியாற்றுவார்கள் என்பது பிரச்சினைக்குறிய விடயமே என்றும் கூறியுள்ளார். அத்துடன் நீதிமன்றத்தினால் அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டாலும் மக்கள் நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும் என்று அவர் கூறியுளளார்.

Leave a comment