அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் அரிசி இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்து அரிசிக்கான அதிகபட்ச சில்லறைவிலையை தற்காலிகமாக நீக்குவது என்றும் அதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களைப் பார்த்து சில மாதங்களின் பின்னர் உறுதியான முடிவு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையினால் அரிசியை இறக்குமதி செய்பவர்களின் தொகை குறைவடைந்துள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

