இந்திய சீன பாதுகாப்பு படைகள் கல்வீச்சு தாக்குதல்கள் 

591 0

Image result for இந்திய சீன பாதுகாப்பு படைகள் கல்வீச்சு தாக்குதல்கள் இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியில் இரண்டு நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் நேற்றையதினம் கல்வீச்சு மோதல் இடம்பெற்றுள்ளது.

லடாக்கில் உள்ள புகழ்பெற்ற பங்கொங் ஏரி ஊடாக சீனாவின் படையினர் இரண்டு தடவைகள் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்திய படையினர் மனிதசங்கிலியை உருவாக்கி அவர்களின் எல்லை மீறலை முறியடித்துள்ளனர்.

எனினும் இதன்போது சீனப் படையினர் கற்களை வீசி இந்திய படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்தியப் படையினரும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் இரண்டு தரப்பின் துருப்பினரும் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் குறித்து இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் இன்னும் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Leave a comment