சீரா லியோனில் ஏற்பட்ட நிலசரிவை அடுத்து, அங்கு அவசர ஒத்துழைப்புக்கு கோரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்அதிகாலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் இதுவரையில் 400 பேர் பலியானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலர் நிலத்துக்குக் கீழ் புதையுண்டிருப்பதாக கருதப்படும் நிலையில், மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் தலைநகர் ஃப்ரீடவுனில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவிகளை வழங்க அந்த நாட்டின் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.