முறையான குப்பைக்கூல முகாமைத்துவம் – ஜனாதிபதி உத்தரவு 

266 0

முறையான குப்பைக்கூல முகாமைத்துவ நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக 9 மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு குப்பைக்கூலங்கள் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பின் ஒருகட்டமாக, இந்த நடவடிக்கையை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலத்தில் இடம்பெற்ற 9 மாகாணங்களின் குப்பைக்கூலங்களது முகாமை தொடர்பான கலந்துரைடயாலின் போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் குப்பைக்கூளங்களை திரட்டி அகற்றல் நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேரிப் பகுதிகளில் குப்பைக்கூலங்கள் தேங்கி நிற்பதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

Leave a comment