ஐ.தே.மு.தலை­வர்கள் இன்று ஜனா­தி­ப­தி மைத்திரியுடன் சந்­திப்பு

339 0

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலை­வர்கள் இன்று புதன்­கி­ழமை  இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை  சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். ஜனா­தி­பதி மாளி­கையில்  இந்த சந்­திப்பு  இடம்­பெ­ற­வுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்  அல­ரி­மா­ளி­கையில்  நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில்  அங்கம் வகிக்கும்  கட்சித் தலை­வர்கள்  கூட்­டத்­தி­லேயே  இந்தத் தீர்­மானம்  எடுக்­கப்­பட்­டுள்­ளது.  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை  மதிய போசன விருந்­து­ப­சா­ரத்­திற்கு அழைத்­துள்ளார்.  இந்த  மதிய போச­னத்தை அடுத்து இடம் பெற்ற  கூட்­டத்­தி­லேயே  ஜனா­தி­ப­தியை இன்று சந்­திப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மாகா­ண­சபைத் தேர்­தல்­களை ஒத்­தி­வைத்து  அனைத்து மாகா­ண­ச­பை­க­ளுக்கும்  ஒன்­றாக  தேர்­தலை நடத்­து­வ­தற்­கான  20 ஆவது  திருத்த சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்கு  அமைச்­ச­ரவை  கடந்­த­வாரம் அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது.  இந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த சிறி­லங்கா சுந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த அமைச்­சர்­களும்   இந்த தீர்­மா­னத்­திற்கு  இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தனர்.  இந்­த­நி­லையில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்ற சுதந்­தி­ரக்­கட்­சியின்  மத்­தி­யக்­கு­ழுக்­கூட்­டத்தில்  20 ஆவது  திருத்த சட்­டத்­திற்கு எதிர்ப்பு  தெரி­விப்­பது என்று  முடிவு  எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில்  இந்த விடயம் தொடர்பில்   சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறு­தி­யான நிலைப்­பாடு என்ன என்­பதை அறி­வ­தற்­கா­கவே  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும்   கட்­சி­களின் தலை­வர்கள்  இன்று ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திக்­க­வுள்­ளனர்.

இந்த சந்­திப்பில் மாகா­ண­சபைத் தேர்தல், மற்றும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான காலம் தொடர்­பிலும்  இரு தேர்­தல்­களை நடத்தும்  விடயம் தொடர்­பான சட்­ட­மூ­லங்கள் குறித்தும்  ஆரா­யப்­பட்டு முடி­வுகள் எடுக்­கப்­படும் என்று   தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத­னை­விட புதிய அர­சி­ய­ல­மைப்பை  உரு­வாக்கும்  விட­யத்­திலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இன்­னமும் உறு­தி­யான நிலைப்­பாட்டை அறி­விக்­க­வில்லை. வழி­ந­டத்தல் குழுவில்  கட்­சியின் உறு­தி­யான நிலைப்­பாடு  இன்­னமும்  தெரிவிக்கப்படாத நிலையில் காலம் கடத்தப்படுகின்றது.  இந்த விடயம் தொடர்பிலான ஜனாதிபதியின் நிலைப்பாட்டையும்  இந்த சந்திப்பில்  ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள்  கேட்டறியவுள்ளதுடன்  இதற்கான  ஒத்துழைப்பை வழங்குமாறும்  கோரவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறன்றது.

Leave a comment