வட மாகாண முதலமைச்சர் – பொலிஸார் இடையே சந்திப்பு

339 0

வட மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் வட மாகாணத்தின் பாதுகாப்பு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில காலங்களாக வட மாகாணத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை நிலைநாட்ட முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக மாகாண முதலமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு தடவை தமது மாகாணத்தின் பாதுகாப்பு வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment