யாழில் தாக்கி இளைஞர் பலி!

14639 0

ஆறு மாதங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் இன்று அதிகாலை மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் காவற்துறை இதனைத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மழை பெய்த போது குறித்த இளைஞர் வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கத்திற்கு பின்னர் அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், ஏற்கனவே அவர் உயிரிழந்து காணப்பட்டதாக அந்த மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த ஆறு மாதங்களாக யாழ்ப்பாணத்தில் மழையின்றி வறட்சி நிலவிய நிலையில், வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டமே இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment