18 சாரதிகளுக்கு அபராதம்

199 0

வெவ்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 சாரதிகளுக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர முன்னிலையில் நேற்று இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , குடிபோதையில் வாகனம் செலுத்திய 6 சாரதிகளின் சாரதி அனுமதிபத்திரங்களை 3 மாதக்காலத்திற்கு ரத்துச்செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா ,யக்கல மற்றும் கனேமுல்ல போன்ற காவற்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave a comment