அனைத்து இந்தியர்களும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் – பிரதமர் மோடி 

9263 0

அனைத்து இந்தியர்களும் நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கில் செயற்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலம் பொருட்டு விரைவாக பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 70 ஆயிரத்துக்கும் அதிகமான காவற்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் செங்கோட்டையில் மாத்திரம் 9100 படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment