சியராலியோனில் கனடும் மழை – 300க்கும் மேற்பட்டோர் பலி 

301 0

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
அனர்த்தில் 179 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சியரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.
இதனால், அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், சுமார் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பலியானவர்களில் 179 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Leave a comment