அமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்!

259 0

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண் மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட, கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக தப்பிச் சென்ற அவரது குடும்பத்தினர் மேரிலாந்தில் குடியேறினர்.

இந்நிலையில் பல உயர் பதவிகளை வகித்த கிரிஷாந்தி, மேரிலாந்தின் ஆளுநருக்காக தான் போட்டியிடுவது குறித்து அண்மையில் அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் முதல் பெண் கிரிஷாந்தி என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

கிரிஷாந்திக்கு அரசியல் புதிய விடயமல்ல. கடந்த ஒபாமா நிர்வாகத்தின் போது, அவர் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

யேல் கல்லூரியில் மூலக்கூறு உயிரியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகியவற்றில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் McKinsey & Company மற்றும் சட்ட நிறுவனமான Jenner & Block என்பவற்றில் அவர் நேரம் செலவிட்டுள்ளார்.

கிரிஷாந்தி மற்றும் அவரது கணவர் Collin O’Mara புதிதாக பிறந்த தங்கள் மகள் Alanaவை ஜுன் மாதம் வரவேற்றனர். மேலும் அவர் ஆளுநருக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான காரணங்களில் ஒன்றாக தனது மகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் ஒரு குழந்தையாக இருந்த போது எங்கள் குடும்பம் இங்கு வந்தது. குறித்த சந்தர்ப்பத்தில் எனது அம்மா எனக்கு கொடுத்த சவால்கள், வாய்ப்புகள் எனது மகளுக்கு கிடைக்காதென்பது குறித்து வருத்தமாக உள்ளது. அதற்காகவே தான் ஆளுநர் போட்டியில் போட்டியிட விரும்புகின்றேன்.

மேரிலாந்து மக்கள் சிறந்த ஆணின் சேவையை ஒரு பெண்ணிடம் இருந்து பெற்று கொள்வதை ஏற்றுக் கொள்வார்கள் என நான் நம்புகின்றேன்” என கிரிஷாந்தி தெரிவித்துள்ளார்.

Leave a comment