எலும்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட 4 இலங்கை சிறார்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – டெக்கான் ஹெரால்ட்

200 0

எலும்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு இலங்கை சிறார்கள் சத்திர சிகிச்கை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக ‘டெக்கான் ஹெரால்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பெங்களுர் மருத்துவமனையில் இந்த அயல் உறுப்பு பொருத்தல் சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறார்களின் உறவினர்களின் உறுப்பு பொருந்தாத போதிலும், உறவு முறையற்ற வெளியார்களின் உறுப்புக்கள் பொருந்தியதன் காரணமாக இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக மருத்துவர் சுனில் பாத் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறார்கள் நான்கு, ஐந்து, பத்து மற்றும் 15 மாத வயதைக் கொண்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment