ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குமாரசிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
தம்மை அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னர் அது தொடர்பில் தமக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லையெனவும் குமாரசிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

