யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீட மாணவர்களின் நீதம் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
சட்டபீட மாணவர்களின் சங்கத்தின் தலைவர் அ.ரொமல்சன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
வருடாத்த நீதம் நூல் வெளியீட்டு விழாக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கலத்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக இலங்ககை சட்டதரணி சங்கத்தின் வலைய தலைவரும் ஜனாதிபதி சட்டதரணியும் ஆகிய சாந்த அபிமன்னசிங்கம், யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் கலைபீடாதிபதி கலாநிதி கே.சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போருக்கு பின் புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு தொடர்பில் கலாநிதி கலான செல்வரட்னத்தின் விசேட உரையும் நடைபெற்றது.
நிகழ்வில் விவாத சமர் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
விவாத சமர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி, பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர் தர பாடசாலை, முல்லைதீவு வித்தியானத்தா இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகள் பங்குபற்றி வெற்றி ஈட்டியது.
இதன் போது மாணவர்களுக்கு சான்றிதள்கள் வழங்கி வைக்கப்பட்டது.