அரசியல் தீர்வு முயற்சிகளை தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- தமிழீழ விடுதலை இயக்கம்(காணொளி)

301 0

அரசியல் தீர்வு முயற்சிகளை தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது.
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சிறீகாந்தா, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களா எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்னம் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் கட்சியின் செயலாளர் சிறீகாந்தா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Leave a comment