பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் தமது கடமைகளை வெளிப்படுத்தவில்லை

286 0
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் தமது கடமைகளை வெளிப்படுத்தவில்லை என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு பிரேரணைகளுக்கு இணை அனுசரனை வழங்கியிருந்தபோதும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகடொன்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக அவசியமானகும் என்றும் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Leave a comment