மத்தள விமான நிலையத்திற்கு 205 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் இந்தியா

200 0

மத்தள விமான நிலையத்திற்கு 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் யோசனை தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. 

மத்தள விமான நிலையத்தின் நிர்வாகம், முகாமை, பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றிற்காக இந்திய அரசாங்கம் முன் வந்துள்ளதாக த ஹிந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவினால் உரிமை பெறப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மத்தள விமான நிலையத்திற்காக முதலீடு செய்ய முன் வந்துள்ளமை இந்தியாவின் தந்திரோபாய முறையாகும் என்று த ஹிந்து கூறியுள்ளது.

இந்த யோசனை ஊடாக குறித்த விமான நிலையத்தின் 70% உரிமையை 40 ஆண்டுகளுக்கு இந்திய பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் மத்தளை விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அதன் பங்காளியாகும் யோசனை ஒன்று இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக அண்மையில் கூறியிருந்தமை கூறத்தக்கது.

Leave a comment