இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் மீட்பு

337 0

1973133871Untitled-1தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளின் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்கு இடமான செயற்பாட்டினால் அவர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில், அவரிடம் இருந்து 250 கிலோ கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக, தமிழக கடலோர பாதுகாப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.