உண்மையைக் கண்டறியும் குழு அடுத்த மாதம் உருவாக்கப்படும் – மங்கள

351 0

mangala_sama-538-720x480உண்மையைக் கண்டறியும் குழு அடுத்த மாதம் உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமை;சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி உண்மையைக் கண்டறியும் குழுவுக்கான பொறிமுறையும் அடுத்த மாதம் உருவாக்கப்படும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.