எவன்காட் வழக்கு எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக நவம்பர் 17 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

379 0

தெற்கு கடற்­பி­ர­தே­சத்தில் மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­மான எவன் காட் நிறு­வ­னத்தை நடத்திச் செல்­வ­தற்கு மெரிடைம் தனியார் நிறு­வ­னத்­திற்கு அனு­ம­தியை வழங்­கிய கார­ணத்­தினால் அர­சாங்­கத்­திற்கு 11. 4 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, எவன் காட் நிறு­வ­னத்தின் தலைவர் நிசங்க சேனா­தி­பதி உள்­ளிட்ட 8 பேரின் மீது தொட­ரப்­பட்ட வழக்கு எழுத்து மூல சமர்ப்­ப­ணத்­திற்­காக எதிர்­வரும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்­தி­வைத்து கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகுல உத்­த­ர­விட்­டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் அனைத்து பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ரான எழுத்­து­மூல சமர்ப்­பணம் வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குற்­றச்­சாட்­டுக்­கான எழுத்­து­மூல சமர்ப்­ப­ணங்கள் 3.30 மணி முதல் எழுத்­து­மூலம் சமர்ப்­பிப்­ப­தற்­கான  காரி­யா­ல­யத்­திற்கு சமர்­ப்பிக்­கப்­பட வேண்டும் என்றும் நீதிவான் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­விற்கு  உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

இவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்­கான எழுத்­து­மூல சமர்ப்­ப­ணங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் வழங்­கப்­ப­ட­வில்லை என கருதி வழக்கை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யுமா என்­பது தொடர்பில் எதிர்­வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திக­தி­யன்று அறி­விப்­ப­தாக நீதிவான் தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் உதவிச் செய­லாளர் சுஜாதா தம­யந்தி ஜய­ரத்ன, முன்னாள் இரா­ணுவ மேஜர் பாலித ஜய­சிறி பிர­ணாந்து, அதி­காரி கொட­வல, முன்னாள் கடற்­படை தள­பதி ரியர் அட்மிரல் சோம­தி­லக திஸா­நா­யக்க, எவன்காட் நிறு­வ­னத்தின் தலைவர் நிசங்க சேனா­தி­பதி, முன்னாள் கடற்­படை தள­பதி ஜயநாத் குமா­ர­சிறி கொலமபகே, முன்னாள் கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் எஸ்.எம்.பிரான்ஸிஸ் டயஸ் ஜயரத்ன பெரேரா ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

Leave a comment