திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், கிணற்று நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி (காணொளி)

370 0

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில், கிணற்று நீரில் மூழ்கி 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக உப்புவெலி பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, தேவா நகரைச் சேர்ந்த 16 வயதுடைய எம்.ஹேமநாதன் மற்றும் ஆனந்தபுரியை சேர்ந்த 15 வயதுடைய கே.புவிராஜ் ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நண்பர்களான இரு சிறுவர்களும் இன்று முற்பகல், ஆனந்தபுரியிலுள்ள பொதுக் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்ற போதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு சடலங்களையும் மீட்ட உப்புவெலி பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment