யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குடுபங்கள் வறட்சியால் வாழ்வாதரங்களை இழந்துள்ளது- என்.வேதநாயன்(காணொளி)

664 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குடுபங்கள் வறட்சியால் வாழ்வாதரங்களை இழந்துள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவகம் வடமராட்சி கிழக்கு பகுதிகள் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 ஆயிரத்து 584 குடும்பங்களுக்கு  குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

50 ஆயிரம் மக்கள் குடிநீர் பெற்றுகொள்கின்றார்கள் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

சமூர்த்தி உதவியை தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ப மீளாய்வு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதாக அசாங்க அதிபர் என்.வேதநாயன் தெரிவித்துள்ளார்.

Leave a comment