வவுனியா, தேக்கசவத்தைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு (காணொளி)

406 0

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியாக குடும்பஸ்தர் வசித்து வந்த நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை வீடு திறக்கப்படாமையால், அருகில் வசிப்பவர்கள் வீட்டில் வசித்தவரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர்.

ஆனால் வீடு நீண்ட நேரமாகவும் திறக்கப்படாமையால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் வீட்டை திறந்து பார்த்த போது குறித்த குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்டார்.

இதன் போது 70 வயதுடைய எஸ்.கணேசலிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிசாரால விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment