தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டுமானால், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்-மனோ (காணொளி)

282 0

மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் ஊடாக, தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அனுசரனையில் அமைச்சர்களுக்கான மொழி வகுப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment