போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்தியேக பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றை பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
பாதாள கும்பலையும், போதைப்பொருள் வியாபாரத்தையும் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

