ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவிடம் கையளித்தது தவறு

259 0
ஹம்பாந்தோட்ட துறைமுகம் பொதுமக்களுக்கு உரியது என்றும்,அதனை சீன நிறுவனத்திடம் கையளித்தது தவறு என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த துறைமுகத்தின் உரிமையை மீண்டும் மக்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றிட்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை குத்தகைக்கு பெற்ற நிறுவனம் செல்வந்த நிறுவனமாக மாறிவிடும் என்பதுடன், கொழும்பு துறைமுகம் நீச்சல் தடாகமாக மாறிவிடும் என்றும் அமைச்சர் விஜயதாச குறிப்பிட்டுள்ளார்.
வாழ்நாள் பூராகவும் ஊழல் எதிர்ப்பிற்காக  தாம் அதன்மூலம் பல பில்லியன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும்,இ.போ.ச,இலங்கை காப்புறுதி நிறுவனம்,லிட்ரோ கேஸ் நிறுவனம் உ;ளிட்டவைகளை மக்களிடமே பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடும் போது அரசாங்கத்தில் இருப்பதிலும் வெளியே செல்வது பிரச்சினை இல்லை என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment