ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேருக்கு பிடியாணை

224 0

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை கைதுசெய்ய முயன்றபோது, பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

வெள்ளை வேனில் சிவில் உடையில் வந்த காவல்துறையினர் அவரை கைதுசெய்ய முயற்சித்தமையால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்க அமைச்சர் சாகல ரத்னாயக்க, இது தொடர்பில் அறிக்கையொன்றை காவல்துறைமா அதிபரிடம் கேட்டிருந்தார்.

கைதுசெய்ய சென்ற சம்பவம் மற்றும் அதன்போது காவல்துறையினர் கடைபிடித்த நடைமுறைகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

இது இவ்வாறு இருக்க, அதன் பின்னர் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் ரயன் ஜயலத் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

Leave a comment