கணவருக்காக கஞ்சா செடியினை தனது வீட்டில் வளர்த்த பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது
கஹட்டகஸ்திகிலிய – கொன்வேவ வீதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் கஞ்சாவிற்கு அடிமையாகியுள்ள நிலையில், அவருக்காக கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக அறியவந்துள்ளது.
கஹட்டகஸ்திகிலிய காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் வீட்டின் பின்புறமாக கஞ்சா செடி நடப்பட்டுள்ளதுடன், சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்க்கப்பட்டுள்ளது.
வேறு ஓர் பயிர் செய்கையினை வளர்ப்பது போல் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து அறியவந்துள்ளது.
இரு பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், அனூராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குற்றத்தினை ஓப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி அவருக்கான தண்டனைக்குரிய தீர்பு வழங்கப்படவுள்ளது.