பாராளுமன்றத்தில் குழப்பம் ,கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்திற்கு அழைப்பு

236 0

சமுர்த்தி உதவித் தொகை தொடர்பிலான சர்ச்சை காரணமாக, பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவசர கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றை முன்னெடுக்க சபாநாயகர் கரு ஜெயசூரிய தீர்மானித்துள்ளார்.
மேலும், அதுவரை பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சமுர்த்தி உதவித் தொகை மட்டுப்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அடுத்த சபை அமர்வில் எஸ்.பி.திஸாநாயக்க தகவலளிப்பார் என, இதற்கு பதிலளித்த, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த விடயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் தமது எதிர்ப்பை தெரிவிப்பதாக, இதன்போது, பிரதியமைச்சர் அஜித் பி பெரேராவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று கைகளில் கறுப்புப் பட்டியணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு அவைக்கு சமூகமளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment