யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 24 பேரின் உறவினர்கள் நேற்றைய தினமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்பட்ட, வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத சம்பவங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் மூலம் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வடமராட்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலி ஸார் இணைந்து இரு நாட்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது மொத்தமாக 42 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 24 பேர் துன்னாலைப் பகுதியில் வீடுவீடாக நடைபெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு துன்னாலையில் கைதானவர் களின் உறவினர்களினால் மேற்படிக் கைதுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. தமது உறவுகள் சுற்றிவளைப்பின் போது, வீடுகளில் வைத்தே கைது செய்யப்பட்டிருந்தனர், அவர்கள் எந்தக் குற்றத்தினையும் புரியவில்லை, குற்றம் செய்தவர்கள் என்று தேடப்பட்ட வர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தவர்களையே சுற்றிவளைப்பின் போது கைதுசெய்து சென்றுள்ளனர். கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள், அன்றாடம் கிடைக் கும் வேலைகளைச் செய்து, அதில் வரும் பணத்தினைக் கொண்டே நாம் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்கின்றோம். இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதால் எமது குடும்பத்தின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இவர்களின் கைதானது உரிமை மீறலாகும். அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தே அவர்கள் இம்முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் இல ங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வின் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப் பட்டு, இதுதொடர்பான நடவடிக்கையை துரிதகதியில் முன்னெடுக்கப்படும் என்று முறைப்பாட்டினை பதிவுசெய்தவர்களிடம் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் உறுதி யளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.