நீதிபதி இளஞ்செழியனுக்கு ஜனாதிபதி பாராட்டு கடிதம்!

207 0

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி அனுப்பி வைத்த குறித்த கடிதம் நேற்று காலை நீதிபதிக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலும், இதில் படுகாயமடைந்த இரு மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கையெழுத்திட்டு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.“அன்றைய தினம் இடம்பெற்ற துன்பகரமான சம்பவத்தின் போது நீதிபதியாகிய நீங்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஜனாதிபதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment