வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) நடைபெறவுள்ளது.
முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அறிவிக்கப்படும்.