வியட்நாமில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
41 மில்லியன் டொலர்கள் அளவுக்கு பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக அராங்கம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த வாரத்தின் ஆரம்பித்தில் இருந்து கடுமையாக மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது.
நான்கு மாகாணங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மழை மற்றும் வெள்ளச் சேதம் தொடர்பாக அந்நாட்டின் பேரிடர் மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 41 மில்லியன் டொலர் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.