கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி மரணம்

253 0

அறியப்படாத சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் மரணித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக குறித்த சிறுமி சுகயீனம் அடைந்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் நேற்றைய தினமே குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு எட்டு மணியளவில் குறித்த சிறுமி உயிரிழந்தார்.

சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியும் என மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment