வடமராட்சியில் ஆதாரமில்லாத கைதுகள்!! கொதித்தெழும் தாய்மார்

195 0

பொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர். நாங்­கள் பயத்­தில் உறைந்து போயுள்­ளோம். அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுங்­கள்” என்று வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்த தாய்­மார்­கள், இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின்

யாழ்ப்­பாண பிராந்­தி­யக் கிளை­யில் நேற்று முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

வட­ம­ராட்­சி­யில் கடந்த சில தினங்­க­ளா­கப் பொலி­ஸார் தொடர் தேடு­தல் நடத்தி வரு­கின்­ற­னர். பொலி­ஸார் மீது தாக்­கு­தல் நடத்­திய சந்­தே­கத்­தில் 17 பேரை இது­வரை கைது செய்­துள்­ள­தாக அவர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.
இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் குடும்­பத்­தி­னர், மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நேற்று நேர­டி­யா­கச் சென்­றுள்­ள­னர். பிராந்­திய இணைப்­பா­ளர் த.கன­க­ரா­ஜி­டத்­தில் தமது முறைப்­பாட்டை வாய்­மொழி மூல­மாக அவர்­கள் முன்­வைத்­துள்­ள­னர்.

“பொலி­ஸார் எந்­த­வித ஆதா­ர­மு­மின்றி எமது பிள்­ளை­க­ளைக் கைது செய்­கின்­ற­னர். தொடர்ந்­தும் தேடு­தல் நடத்தி வரு­கின்­ற­னர். பிள்­ளை­கள் பாட­சா­லைக்­குச் செல்­வ­தற்கே அச்­சப்­ப­டு­கின்­ற­னர். பொலி­ஸார் சும்மா எமது பிள்­ளை­க­ளைக் கைது செய்­வ­தற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்” என்று மக்­கள் கோரி­யுள்­ள­னர்.

இது தொடர்­பில் யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­பர் மற்­றும் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி ஆகி­யோ­ரி­டம் விளக்­கம் கேட்­ப­தாக, பிராந்­திய இணைப்­பா­ளர் த.கன­க­ராஜ் குறிப்­பிட்­டுள்­ளார்.

Leave a comment