ஆப்கானிஸ்தானில் மேற்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலியாகினர். 64 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கனிலுள்ள மசூதியில் செவ்வாய்க்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் 29 பேர் பலியாகினர். 64 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முகமத் அதி கூறும்போது, “இரண்டு தீவிரவாதிகள் மசூதியின் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர்.” என்றார்.
இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாலிபன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 1,700 பேர் பலியாகியுள்ளனர்.

