சிராந்தி மற்றும் யோசிதவிற்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு பெற்றுக்கொள்ள முயற்சி

214 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ மற்றும் புதல்வர் யோசித ராஜபக்ச ஆகியோரிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் சிராந்தி மற்றும் யோசிதவிடம் விசாரணை நடத்துவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

கடந்த மாதம் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புக்களை பல்வேறு காரணங்களை காண்பித்து இருவரும் தட்டிக் கழித்துள்ளனர்.

எனவே, நீதிமன்றின் உத்தரவு ஒன்றை பெற்றுக் கொண்டு இருவரிடமும் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave a comment