ஹம்பாந்தொட்டை உடன்படிக்கை – அமைச்சர்களுக்கு கால அவகாசம் 

321 0

இலங்கை அரசியலில் தற்போது சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ள ஹம்பாந்தொட்டை துறைகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கிய உடன்படிக்கை குறித்த நிலைப்பாடுகளை தெரிவிக்க, அமைச்சர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போது குறித்த உடன்படிக்கைகள் பிரதிகள் அனைத்து அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை ஆராய்ந்து, தங்களின் நிலைப்பாட்டை அடுத்த அமைச்சரவையில் முன்வைக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர்கள் குறித்த உடன்படிக்கை தொடர்பான திருத்தங்களை முன்வைத்தால், அவை குறித்து அவதானம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment