மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிப்பு 

326 0
இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்ந்தும் நிலவுகிறது.
இந்த நிலையில் ஆபத்துமிக்க பகுதிகளில் உள்ள மக்களை இது குறித்து தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மையம் மேற்கொண்டு வருவதாக அதன் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மண்சரிவு ஏற்படுவதற்கு முன்னரான ஆரம்ப அறிகுறிகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தில் நேற்றையதினம் 100 மில்லிமீற்றர் அளவில் மழைபெய்தமையே இதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment