யாழில் நீதிபதியைச் சுட்டவனுக்கு ”ரெஸ்டர்” கொண்டு போன மனைவி

261 0

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரை பார்வையிடுவதற்காக வந்த மனைவியால் புதிய சிக்கல் தோன்றியுள்ளது.

குறித்த பெண் தனது கணவருக்கு கொடுத்த பொதியில் இருந்து சில பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளதுடன், சந்தேகநபரின் மனைவியையும் கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொதியில் இருந்து, ஆடைகளுக்கு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், மின்சாரக் கடத்தலை பரிசோதிப்பதற்கு பயன்படுத்தப்படும் “டெஸ்டர்” என்ற கருவியை மீட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதை தொடர்ந்து சந்தேகநபரின் மனைவியை சிறைக்காவலர்கள் கடுமையாக எச்சரித்துள்ளதுடன், இதற்குப்பிறகு சிறைக்கு வந்து அவரது கணவரை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை யாழ்.நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபராக கருதப்படும் சிவராசா ஜெயந்தனை பொலிஸார் தேடி வந்தனர்.

குறித்த நபர் கடந்த செவ்வாய்க் கிழமை பொலிஸில் சரணடைந்த நிலையில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் யாழ்.சிறைச்சாலையில் தனிச்சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை பார்வையிடுவதற்கு சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த சந்தேகநபரின் மனைவி ஆடைகளுக்கு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், மின்சாரக் கடத்தலை பரிசோதிப்பதற்கு பயன்படுத்தப்படும் “டெஸ்டர்” என்ற கருவியை கொண்டுவந்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு இனி கணவரை பார்வியிடுவதற்கான வாய்ப்பையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment