வித்தியாவின் வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இன்று

362 0

d3246eb8acb0e7876960d47defc805d4_1462955214-sபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மாணவி வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருடமாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கால நீடிப்பின் நிமித்தம், கடந்த மே மாதம் 11ஆம் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 3 மாதங்களுக்கு காலநீடிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் மேலதிக கால நீடிப்புக்காக மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.