சுனாமியின் போது தமிழக முதல்வர் இலங்கைக்கு உதவியளித்தார்.

299 0

jaya2_2801873fசுனாமியின் பின்னர் இடம்பெற்ற புனர்வாழ்வு திட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்துறை ராஜாங்க அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி புனர்வாழ்வு திட்டங்களுக்கு முதலமைச்சர் உதவியதாக  அவர் குறிப்பிட்டார்.
நட்பு நாடுகள் சில இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த போதும் தமிழக முதல்வர் இந்த உதவியை மேற்கொண்டார் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கூட தமிழக அரசாங்கத்தின் சுனாமி உதவிகள் குறித்து தமது ஆச்சரியத்தை வெளியிட்டதாகவும் ராஜாங்க அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.