யாழ் சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பியோட்டம்

234 0

யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவென அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.

குறித்த கைதி யாழ் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவரப்பட்டு திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கொன்றில் யாழ் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே அவர் தப்பியோடியுள்ளார்.

இந்த நிலையில் உடனடியாக அவரை பிடிப்பதற்கான முயற்சிகளை சிறைக்காவலர்கள் மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை

யாழ். நீதிமன்ற நீதவானால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த கைதியே இவ்வாறு நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave a comment