யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

361 0

யாழ்ப்பாணம் – துன்னாலை பிரதேசத்தில் காவல்துறை அதிகாரியொருவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு இளைஞர்கள் சிலர், கொடிகாமம் காவல்நிலையத்தில் சேவைபுரியும் அதிகாரியொருவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக கொடிகாமம் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொடிகாமம் மற்றும் பருத்தித்துறை காவல்துறை அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a comment