இலங்கை தமிழ் மக்கள் ஏனைய இனத்தவர்களுக்கு நிகரான உரிமைகளுடன் வாழ வேண்டும் – ஸ்ராலின் 

250 0
இலங்கையில் தமிழ் மக்கள் ஏனைய இனத்தவர்களுக்கு நிகரான உரிமைகள் மற்றும் அந்தஸ்த்துடன் வாழ்வதற்கான அரசியல் ரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயற்பாட்டுத் தலைவர் எம்.கே.ஸ்ராலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை நீக்கி உத்தரவிட்டமையை வரவேற்று அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா என்ன செய்யும்? என்பதை பலர் எதிர்பார்த்துள்ளார்கள்.
இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியா பெரும்பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment